Friday, June 17, 2011

*இரு மூர்த்திகள் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

"1921ல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிஜியும், ஸ்ரீமத் சிவானந்த சுவாமிஜியும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு வந்திருந்தார்கள். தினமும் காலையும், மாலையும் அவர்களைக் காணச் செல்லுவோம். இருவரும் பெரிய மூர்த்திகள். குருமஹராஜ், அன்னையார், சுவாமிஜியைப் பார்க்காத குறை, இம்மூர்த்திகளை பார்த்ததால் தீர்ந்தது".

சென்னை ராமகிருஷ்ண மடத்திற்கு சுவாமிஜீகள் வந்திருந்தபோது தினமும் காலை 5-00 மணிக்கு பார்க்கப்போவேன். போகும்போது பழங்களைக் கொண்டு போவேன். பார்க்கவே மாட்டார் பிரம்மானந்த சுவாமிஜி. பார்க்கவில்லையே என்று ஒரு நாள் கொண்டு போகவில்லை. 'ஏன் பழம் கொண்டு வரவில்லை என்று கேட்டார்?'

"ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிலர் கொண்டு வரும் பட்சணங்களை தூயது அல்ல என்று உணர்ந்தால் சாப்பிடமாட்டார். சில பக்தர்கள் கொண்டு வராவிட்டால் ஏன் கொண்டு வரவில்லை என்று கேட்பார் அதுபோலத்தானே பிரம்மானந்த சுவாமிஜியும் கேட்டது?" என்று நாங்கள்(ஓர் அன்பர்) கேட்டார்.

"ஆமாம் அதுபோலத்தான்" என்றார் நம் பெரிய சுவாமிஜி.

"ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிஜி பெரும்பாலும் சமாதி நிலையிலேயே இருப்பார். செகரட்டரியாக இருந்த சாரதானந்த சுவாமிஜி, மடத்து விஷயமாகக் கையெழுத்து வாங்குவதற்கு இரண்டு நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கும்".

"பரமஹம்சருடைய சிஷ்யர்களே ஒரு அலாதியான கூட்டம். எல்லாருடைய வாழ்க்கையும் சேர்ந்து பரமஹம்சருடைய வாழ்க்கைக்கு நிகர்".

No comments:

Post a Comment