Tuesday, June 21, 2011

*கடமை உணர்வு

அறுபதாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள் திருவண்ணாமலை ஈசான்ய முனிவர் மடத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி முடித்துவிட்டுத் திருப்பராய்த்துறை மடத்திற்கு திரும்பி வர விழுப்புரம் இரயில் நிலையத்தில் வண்டியேறி வரும்போது புயல், மழையால் லால்குடிக்கு மேல் இரயில் செல்லவில்லை. சாலைப் போக்குவரத்தில் பல மரங்கள் விழுந்து பஸ் போகவில்லை.

கடமை உணர்வுமிக்க சுவாமிகள் 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பராய்த்துறைக்கு நடந்தே சென்று தன் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். அப்படிப்பட்ட கடமை வீரர், கர்மயோகியின் வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment