Tuesday, February 12, 2013

*விவேகானந்தம் 150



http://vivekanandam150.com என்ற இணையதளத்தைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் இந்த இணையதளம் துவக்கியதின் நோக்கம் என்ன? விடை இதோ...

பாரதத்தின் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் சுவாமி விவேகானந்தருக்கு பிரதான இடம் உண்டு. நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்களை உருவாக்கிய வீர உரைகளுக்கு உரித்தானவர் சுவாமி விவேகானந்தர். ஹிந்து மதத்தின் கசடுகளை நீக்கி, அதை புனருத்தாரணம் செய்வதைத் துவக்கி வைத்தவரும் அவரே. அவரது 150-வது பிறந்த தின ஆண்டை (2013-2014) நாடு உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இதையொட்டி, சுவாமிஜியின் போதனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லவே, தேசிய சிந்தனை கழகம் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளது. சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த இணையதளம் திகழும்.

http://vivekanandam150.com இணையதளத்தில் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நம் பெரியசாமி சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய “விவேகானந்தர் ஜீவிதம்” நூலின் சுருக்கத்தை நமது இதே இணையதளம் rkthapovanam.blogspot.inல் 2012ஆம் ஆண்டு விவேகானந்தரின் மகாசமாதி தினத்தையொட்டி பதிந்திருந்தோம். அதன் முதல் பாகத்தை . http://vivekanandam150.com/?p=1360  சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment